மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன் 2022 ஆம் ஆண்டிலிருந்து கல்லீரலில் ஏற்பட்ட மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மாற்றுக் கல்லீரல் பொருத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் குஜராத்தில் மூளை சாவு அடைந்த 18 மாத குழந்தையின் கல்லீரல் பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

சாலை மார்க்கமாக நான்கு மணி நேரம் 20 நிமிடங்களில் கல்லீரல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.