சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இறந்த புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனா தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்து உடலை  கொண்டு வரமுடியாது சூழல் ஏற்பட்டது. 16 நாட்களுக்குப் பின் மாணவர் ஷேக் அப்துல்லா உடல் சீனாவிலேயே இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், காணொளி மூலம் பெற்றோர்கள், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.