உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கே உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் வேண்டும் என்றே நடத்தப்பட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.