சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட வருகின்றது.

சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி மார்க்கத்தில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணி நடைபெறுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.