ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்த மரியம் நபடான்ஸிக்கு தனது பெற்றோர் 12 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனால் அவர் தன்னுடைய 13 வது வயதிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு முதலில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்தான் உலகின் மிகவும் ஸ்பேர்டைல் பெண்ணாக கருதப்படுகின்றார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது 40 வயது ஆகும் இவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் நான்கு முறை இரட்டை குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்பது ஐந்து முறை, ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் ஐந்து முறை பிறந்துள்ளது. ஒருமுறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவலேட் என்ற நிலையே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது. இவர் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்து விட்டன. தற்போது 20 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகள் உள்ளனர். இவரின் கணவர் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட நிலையில் தற்போது அவர் தனது குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.