உலக அளவில் பல நாடுகளும் தொழிலாளர்களின் நலனுக்காக பல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை நேர குறைப்பை அறிவித்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்டில் வார வேலை நேரத்தை 45 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைக்க இருப்பதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சிலியில் உள்ள பல நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் ஜெநெட் ஜாரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர்களுக்கான உரிமைகளில் நாம் முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.