மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. மியான்மர் நாட்டில் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர உயிரிழப்புக்கு உலக மக்கள் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.