புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரை இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தமிழகத்தில் முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தற்போது புதுச்சேரி அரசும் பின்பற்றி வருகிறது.