இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அன்றைய தினம் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவவுறுத்தி இருக்கிறது.

அதே போல வருகின்ற 11ம் தேதி தெற்கு இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல வரும் 12ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள்,தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்  என்பதால் அன்றைய தினம் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.