தமிழக போக்குவரத்து கழகத்தில் தொழிற் பழகுணர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற் பழகுணர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.