உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன் 20 வயது மகன் அமித் உடன் கான்பூரின் சக்கேரி பகுதிக்கு கட்டிட தொழிலுக்கு வந்துள்ளார். அமித் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அந்த இளம் பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். இந்நிலையில் அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2022 இளம்பெண்ணும் , கமலேஷையும் காணவில்லை. இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோர் சக்கேரி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

ஓராண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இரண்டு பேரையும் டெல்லியில் கண்டுபிடித்து சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கமலேஷ் மற்றும் இளம்பெண் இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் கமலேஷ் இப்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில், புதன்கிழமை அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கமலேஷ் உடன் வாழ விரும்புவதாக இளம்பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.