சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்குவதோடு தல ஒரு லட்சம் ரூபாய் வீதம் பணம் முடிப்பும் கொடுக்கப்பட இருக்கிறது.

இதற்கு தகுதி உடைய நபர்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அமைப்புகள், தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அரியலூரில் இருக்கும் சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.