கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சீனிவாசன். கடந்த மாதம் ஐந்தாம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சீனிவாசனை கொலை செய்து காவிரி ஆற்றின் அருகே புதைத்து விட்டார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி கரூர் ஆட்சியர் பிரபாகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.