சேலம் மாவட்டம் கத்தேரி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் வேணுகோபால். கூலி தொழிலாளியான இவரது நண்பர் ஆபிரகான். சமீபத்தில் ஆபிரகான் தனது தோழியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது வேணுகோபால் கேலி செய்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆபிரகான் தனது நண்பர்களான பிரசாந்த் மற்றும் அர்ஜுனன் ஆகியோருடன் இணைந்து வேணுகோபாலை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நால்வருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வேணுகோபாலை மற்றும் மூவரும் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.