பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் இருந்து தான் விலகியதற்கான காரணம் குறித்து  அவ்வப்போது பிரியங்கா சோப்ரா பேசி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட்டில் நிலவும் சில அரசியலால் தான்விலகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பாலிவுட் சினிமாவில் நுழைந்த காலத்தில் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டேன். எனக்கு யாருடனாவது முரண்பாடு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் அங்கு என்னை யாரும் நடிக்க வைக்கவில்லை. இந்த துறை அரசியல் எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. அதனால் ஒரு பிரேக் எடுக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார். மேலும் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா பாலிவுட் குறித்து இப்படி சொன்னது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.