டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.

இதில் சுமார் 40,000 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத இருக்கும் நிலையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட மலை பாதிப்பால் அங்குள்ள தேர்வர்கள் தேர்வை எழுத முடியாத சூழலில் உள்ளனர்.

எனவே தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தூத்துக்குடி நெல்லை மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.