உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மொஹல்லா பாடி கேட் பகுதியை சேர்ந்த சோனு என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டு மணமகளும் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதனால் மணமகன் சோகத்துடன் திரும்பிச் சென்றார். இரு குடும்பங்களுக்கும் இடையே தற்போது சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.