ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, இசை எவ்வளவு பெரிதோ அதே அளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால் அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போது தான் கலை வெற்றி பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.