பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவரும் நிலையில் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய கணவர் குறித்த விவரங்களை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன்தான் தன்னுடைய கணவர் என்று கூறினார்.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் தன் கணவருடனான திருமண உறவு குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திருமண வாழ்க்கை மிகவும் அழகாக செல்கிறது. என் கணவரை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்று சொல்வது மிகவும் கடினம். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்ல வரும்போது எதிர்பாராத விதமாக ஏதாவது ஒன்று நடந்து வருகிறது. என்னுடைய மோசமான நேரங்கள் மற்றும் அழகான நேரங்களை அவர் பார்த்திருக்கிறார். மேலும் எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் எனக்கு அவர் துணையாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.