தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதனால் அனைத்து பள்ளிகளும் இதே தேதியில் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான குழு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.