அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777 9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737 MAX அகலம் குறைவான விமானங்களை ஏர் இந்தியா வாங்குகிறது. இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அமெரிக்கா-இந்தியா ஒற்றுமையை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.

இதன் வாயிலாக 10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற அதிபரின் அறிக்கை பெருமை வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.