தமிழகத்தில் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில வதந்தியின் காரணமாக பத்து ரூபாய் காசுகள் செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறை  தண்டனை வழங்கப்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதேபோல மற்ற மாவட்டங்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வர்த்தகர் ஒருவர் கூறுகையில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க சில வாடிக்கையாளர்கள் வாங்க மறுக்கிறார்கள் .இதன் காரணமாக வியாபாரிகளும் அதை கடைபிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நாணயத்தை வாங்க மறுப்போருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.