தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (அக பயிற்சி) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் மற்றும் அக பயிற்சிக்குச் சென்ற தொழில் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.