தமிழக முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து வெளியான அறிக்கையில், 10 வருடத்திற்கு மேல் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்தவர்கள் பதிவுறு எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பெற்று அதனை முறையாக பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையத்திற்கு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.