மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்   வார விடுமுறை நாளை முன்னிட்டு தாம்பரம் -கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள் இரவு 7.10 மணிக்கு தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.