மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.