மக்களால் தேர்ந்தெடுக்கபடாத ஒன்றிய நிதி அமைச்சகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீறி செயல்படுவது கேலிக்கூத்து’ என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் கேரளா அமைச்சரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர், நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கேட்டால் அவர்கள் பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்காமல் அதை வெறும் அறிவிப்பாகவே விட்டுவிடுகிறார்கள். வரலாறு காணாத வெள்ளத்திற்கு நாங்கள் நிவாரணம் கேட்டால், அவர்கள் 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை, மக்களுக்காக இரக்கமும் காட்டவில்லை என கூறியுள்ளார்.