வரலாற்றில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பெயர் Honda Prolog. இது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது சந்தையில் உள்ள Honda CR-V SUV உடன் ஒப்பிடும்போது இந்த Honda Prolog EV பெரியதாக இருக்கும் என்றும்  இதில் 85 kWh பேட்டரி பேக்அப் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 482 கிமீ தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.