ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் விமான மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. புதிய முதல்வராக தேர்வான சம்பா சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
ஹைதராபாத் சென்ற முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கச்சிபௌலியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநில மாநில எம்எல்ஏக்கள் தங்க தங்கி உள்ள ஓட்டலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் பேரம் பேசப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். பாஜகவின் குதிரை பேரம் முயற்சியை முறியடிக்க ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.