தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் 2 படம் இன்று வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படகுழுவினர் கடந்த சில நாட்களாகவே மும்மூரமாக ப்ரமோஷனை நடத்திய நிலையில் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கடைசி ப்ரோமோஷன் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பார்த்திபன், இப்போ நான் வைரல் ஆகுற மாதிரி பேசணும்னா ஐடி ரெய்டு பத்தி தான் பேசணும். நா ஸ்கொயர பேசல, ரவுண்டா பேசுறேன். நாளையிலிருந்து ஒரு கோடி ரூபாய் எங்கேயாவது ரெய்டு பண்ணனும்னு தோணுச்சுன்னா பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படும் தியேட்டருக்கு போங்க. கண்டிப்பா இந்த வாரம் ஆயிரம் கோடி வசூலிக்கும் படமா பொன்னியின் செல்வன்2 இருக்கும் என்று கலகலப்பாக பேசி உள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் சம வைரலாகி வருகிறது