சென்னையில் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் AR ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார். விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ARR பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேசினார். அப்போது அவரை இடைமறித்த ARR தமிழில் பேசும்படி செல்லக்கட்டளை இட்டார். அவர் இப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது.

இது ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. இந்நிலையில், ‘ரகுமான் மனைவிக்கு தமிழ் வராதா, அவங்க தாய் மொழி என்ன, வீட்டுல என்ன பேசுவாங்க’ என கஸ்தூரி ட்வீட் செய்து பரபரப்பாக்கினார். இதற்கு பதிலடியாக ‘காதலுக்கு மரியாதை’ என ட்வீட் செய்துள்ளார் ரகுமான்.