உத்தராகண்டில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே வந்த யானை மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பிறந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண், கவனக்குறைவாகச் சென்றதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், அந்த யானையின் தந்தம் ஒன்று உடைந்து சேதமடைந்தது.
இந்த அதிர்ச்சிகரமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டும்போது மக்கள் காட்டும் அலட்சியம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
कैसे-कैसे एक्सीडेंट होते हैं
उत्तराखंड के खटीमा रोड पर एक महिला शिक्षिका अपनी एक्टिवा लेकर सीधे हाथी से टकरा गई
टक्कर ऐसी थी कि हाथी के दांत टूट गए जो सड़क पर गिरे थे
हाथी बेचारा किसी तरह से उठा और डर कर जंगल की तरफ भाग गया
बताओ इनको हाथी नजर नहीं आता तो हम जैसे छोटे… pic.twitter.com/8TCn16udpk
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) May 20, 2026
“>
மேலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் காயமின்றி உயிர் தப்பினார், ஆனால் யானைக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, வனப்பகுதி சாலைகளில் செல்லும் பயணிகள் விலங்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
