பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அரசு சார்பில் நெல்லை தங்கராஜுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று உடல் நலக்குறைவினால் திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.