கேரள மாநிலம் கொச்சியில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான ராகுல் மாவேலிபுரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சவர்மா சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக தமிழகத்தில் இதனை போலவே கடந்த மாதம் சவர்மா சாப்பிட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்மை காலமாக சவர்மா சாப்பிடுபவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.