கர்நாடகா மாநிலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதே பகுதியில் உள்ள மின்விநியோக நிறுவனத்திற்கு முதலை ஒன்றைப் பிடித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு விவசாயிகளின் விளை நிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மின்சாரம் வந்தபோது நிலத்தில் முதலை சுற்றி திரிந்துள்ளது.

இதனால் விவசாயிகள் தங்களுக்கு இருக்கும் ஆபத்தை உணர்த்த அந்த முதலையை கட்டி அரசு அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளை சமாதானப்படுத்தி வனத்துறையினர் வந்து முதலையை பிடித்து சென்றுள்ளனர்.