வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி(இன்று) வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேளாங்கண்ணியில் இருந்து 29ஆம் தேதி இரவு 7.30 பதிலாக 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக 850 சிறப்பு பேருந்துகள் கடந்த 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.