பருத்திவீரன் படத்தில் சித்தப்பாவாக நடித்து பேர் போனவர் சரவணன். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது.  இவர் மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார் மனைவி சூரியஸ்ரீ. முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதாவது அவர் கூறுகையில், பட வாய்ப்பு இல்லாதபோது தன் சம்பாதியத்தில் வாழ்ந்ததாகவும், பட வாய்ப்பு வந்தவுடன் வேறு ஒரு பெண்ணுடன் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.