கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது.

புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அலர்ட் கொடுத்துள்ளது.