ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்அரசுத்துறை ஆவணங்களில் பொதுவெளியில் உள்ள ஆதார் தகவல்களை மறைக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு கருதி, மீன்வளத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட சுமார் 20 அரசுத்துறைகளின் பட்டியலை வெளியிட்டு, பொதுவெளியில் தெரியும்படி உள்ள ஆதார் தகவல்களை நீக்க அல்லது மறைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது