உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதுகிறது. இதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.