பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.