எண்ணூர் பகுதியில் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னையே தண்ணீரில் மிதந்த நிலையில், எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான CPCL தான் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து பக்கிங்காம் கால்வாயில் உள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்கள் CPCL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.