மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்டதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு குழு பாராட்டியுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அரசு குழு இன்று சென்னை வந்தது. அந்த குழு பாதிப்புகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர் மற்றும் மற்ற துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது. பின்னர், மீட்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டுகளை தெரிவித்தது. மேலும் பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் குழு உறுதியளித்துள்ளது.