திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சந்திரகலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சந்திரகலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரகலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் எனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதற்காக மன்னார்குடி மற்றும் உள்ளிகோட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரிடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் எனது மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் மோசடி செய்துவிட்டனர். இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.