திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையூத்து சங்கர் நகரில் சாகுல் ஹமீது(54) என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தனுநாயகம்(33) என்பவரும் தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் 30 பவுன் நகைகளை அடகு வைத்து 10 லட்சத்து 13 ஆயிரத்து 820 ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். அதன்பிறகு தான் அவர்கள் கொடுத்தது போலியான நகை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் சாகுல் ஹமீதும், தனு நாயகமும் ஏமாற்றி வந்தனர். இதேபோல இருவரும் தூத்துக்குடியில் இருக்கும் தனியார் வங்கியில் 15 பவுன் போலி நகைகளை அடகு வைத்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதனையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று சாகுல் ஹமீது, தனு நாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.