மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் 2023  இறுதியில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சியை பறிகொடுத்தது.
இதனை தொடர்ந்து பாஜக ஆட்சியமைத்தது. அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி முழு பலத்துடன் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பெரிய வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறது. காங்கிரஸின் முக்கிய மற்றும் கவனத்தை ஈர்க்கும் வாக்குறுதிகளில் ஒன்றாக ரூ.500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.