தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்க்கப்படவுள்ளதாக அரசு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. வருகின்ற  ஜுன் 3ஆம் தேதி கருணாதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட திமுக தலைமை ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் அன்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.