மத்திய அரசானது ஏழை, எளிய  நடுத்தர மக்களுக்கு பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில்  பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுப் பலன்களைப் பெறலாம். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். சந்தாதாரர் சாலை விபத்தில் இறந்தால், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2,00,000 நிதியுதவி வழங்கப்படும்.