பொன்மகள் சேமிப்பு திட்டம் போலவே ஆண் குழந்தைகளுக்கு என்று செயல்படக்கூடிய திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆகும். இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஆண்டில் 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்.

ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். வட்டி 8.1 சதவீதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.