எல்ஐசியில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான பாலிசிகள் இருக்கிறது. அந்த வகையில் தினந்தோறும் 45 ரூபாய் சேமித்தால் 25 லட்சம் லாபம் கிடைக்கும் ஒரு சூப்பரான பாலிசி திட்டமும் எல்ஐசியில் இருக்கிறது. அதாவது எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் தினந்தோறும் 45 ரூபாய் சேமிக்க வேண்டும். அதன்படி ஒரு மாதத்திற்கு ரூ. 1358 சேமிப்பீர்கள். இது ஒரு வருடத்திற்கு 16 ஆயிரத்து 300 ரூபாய் ஆகும்.

இதேபோன்று தொடர்ந்து 35 வருடங்கள் சேமித்தால் உங்களுக்கு பாலிசியின் முடிவில் 25 லட்ச ரூபாய் கையில் இருக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் நாமினிக்கு 125 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். இது தவிர போனஸ் பலன் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரை காப்பீடு பலன்களும் இருக்கிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் மட்டுமே போதுமானது. மேலும் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் இணைந்து பயன் பெறலாம்.